Published : 01 Sep 2018 08:17 AM
Last Updated : 01 Sep 2018 08:17 AM

ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற தமிழக தடகள வீரர்கள் இருவருக்கு தலா ரூ.30 லட்சம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக் கம் வென்ற தமிழக தடகள வீரர்கள் ஆரோக்கிய ராஜிவ், தருண் ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்களுக்கு முதல்வர் நேற்று எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடக்கும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் நீங்கள் இருவரும் 2-வது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன். எனது வாழ்த் துகளை தெரிவித்துக் கொள் கிறேன்.

உங்களுக்கு ஏற்கெனவே, ஆக.20-ம் தேதி ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக் கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக தலா ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

சாதனை புரிந்த உங்களுக்கும் உங்களுக்கு உதவியவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x