Published : 06 Sep 2018 10:17 AM
Last Updated : 06 Sep 2018 10:17 AM

கணவரிடம் இருந்து பிரிக்க முயல்வதாக ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மீது மணிப்பூர் மாநிலப் பெண் வழக்கு: போலீஸ் ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 

கணவரிடமிருந்து பிரிக்க சூழ்ச்சி செய்வதாக ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கருக்கு எதிராக மணிப் பூர் பெண் தொடர்ந்த வழக்கில் இதுதொடர்பாக போலீஸ் ஆணை யர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சோம்ரின் வாஷினோ டேவிட்(34) என்ற பெண் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நான் மணிப் பூரைச் சேர்ந்தவள். கடந்தாண்டு ஜூலை மாதம் பேமின் ஆப்ரா டேவிட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இதற்கு எங் களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் எனது சகோதரி நாங்கள் வசித்த வில்லிவாக்கம் வீட்டுக்கு வந்து எனது தாயாரது உடல் நிலை சரியில்லை எனக்கூறி என்னை மட்டும் கொல்கத்தாவுக்கு அழைத் துச் சென்றார். அதன்பிறகு என்னை சென்னை திரும்புவதற்கு எனது உறவினர்கள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து எனது கண வர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அப்போது எனது உறவினர்களின் மிரட்டலுக்குப் பயந்து அவர்களுடன் செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தேன். அதன்பிறகு சிறிது நாட்களில் எனது கணவர் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். அதன்பிறகு ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் எனது பெற்றோருடன் செல்லுமாறு கூறி வற்புறுத்தினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் வில்லிவாக்கம் போலீஸாரும் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி வந்து தொல்லை கொடுத்தனர். அதன்பிறகு தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் நடந்து வரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென கட்டாயப்படுத்தினர். நான் எனது கணவருடன் அங்கு சென்றபோது ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் அனுப்பி வைத்ததாகக் கூறி சில கிறிஸ்தவ பாதிரியார்கள் என்னிடம் வந்து உனக்குள் தீய ஆவி புகுந்துவிட்டது. அதை விரட்ட வேண்டும் என்கின்றனர். என்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படும்படி மகளிர் ஆணையமும் கூறுகிறது. இதுதொடர்பாக போலீஸ் ஆணையரிடம் கடந்த ஆக.28 அன்று புகார் அளித்தும் அவர் வாங்க மறுத்துவிட்டார். எனது கணவரிடம் இருந்து என்னைப் பிரிப்பதற்காக சூழ்ச்சி நடக்கிறது. எனவே கணவருடன் வசிக்கும் என்னை துன்புறுத்தக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், இதுதொடர்பாக சென்னை போலீஸ் ஆணையர் மற்றும் வில்லிவாக்கம் போலீஸ் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை தள்ளி வைத்தார்.கணவருடன் வசிக்கும் என்னை துன்புறுத்தக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட மனுவில் கோரியிருந்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x