Published : 16 Sep 2018 11:58 AM
Last Updated : 16 Sep 2018 11:58 AM
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், பார்வைத் திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்காக செயல்படும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசை பயிற்சியாளர்களின் மதிப்பூதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுவதால்,1,127 சிறப்பாசிரியர்கள் மற்றும் தசை பயிற்சியாளர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 கோடியே 42 லட்சம் செலவாகும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT