Published : 17 Sep 2018 09:14 AM
Last Updated : 17 Sep 2018 09:14 AM

அடுத்த 10 நாட்களுக்கு கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்களின் சேவையில் இன்றுமுதல் வரும் 27-ம் தேதி வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 8 ரயில்களின் சேவை ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரையில் (21-ம் தேதி தவிர்த்து) காலை 9.15 மணி முதல் 11.55 மணி வரையில் நடக்கவுள்ளன. இதனால், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மேற்கண்ட நாட்களில் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு காலை 8.15 மணிக்கு செல்லும் ரயில் பொன்னேரி வரையிலும், 9 மணி ரயில் மீஞ்சூர் வரையிலும் இயக்கப்படும். இதேபோல், காலை 9.30, 10.25 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களும் பொன்னேரி வரையில் மட்டுமே இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் பொன்னேரியில் இருந்தும், சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் மீஞ்சூரில் இருந்தும் இயக்கப்படும்.

கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.50, 11.20 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில்கள் பொன்னேரியில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x