இபிஎப் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை

இபிஎப் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை
Updated on
1 min read

சென்னையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருபவர் பாண்டியன்.

கடந்த 2002 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.14 லட்சத்துக்கும் மேல் சொத்து சேர்த்திருப்பதாக இவர் மீதும் இவரது மனைவி வெண்ணிலா மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி, வழக்கில் இருந்து வெண்ணிலாவை விடுவித்தும் பாண்டியனுக்கு 4 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in