Published : 15 Sep 2018 05:30 PM
Last Updated : 15 Sep 2018 05:30 PM
புதுச்சேரியில் திருமண விழாவில் பங்கேற்க வந்த நடிகர் விஜயை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நடிகர் விஜயின் ரசிகர் மன்ற பொறுப்பாளர் ஆனந்தின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (வெள்ளிக்கிழமை) புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க நடிகர் விஜய் வருவதை அறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள், அமைப்பு நிர்வாகிகள் திரண்டிருந்தனர். திருமண அரங்குக்குள் விஜய் தன் மனைவி சங்கீதாவுடன் வந்ததும், விஜயைக் காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்ததால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மண்டபத்தில் இருந்த ஏராளமான நாற்காலிகள் சேதமடைந்தன.
இதனால், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவால் மணமக்களின் அருகில் சென்று வாழ்த்து கூட தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், பெரும் முயற்சி செய்து மேடைக்கு சென்று மணமக்கள் அருகில் சென்று விஜய் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், மேடையிலும் ரசிகர்கள் ஏறி அவருடன் புகைப்படம் எடுக்க முயற்சித்ததால், சில நிமிடங்களிலேயே விஜய் அங்கிருந்து புறப்பட்டார்.
காரில் சென்று ஏற முடியாத அளவுக்கு மண்டபத்திற்கு வெளியேயும் கூட்டம் திரண்டது. இதையடுத்து, அங்கிருந்த சில ரசிகர்கள் விஜயை பெரும் பாடுபட்டு அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT