Published : 18 Sep 2018 10:05 AM
Last Updated : 18 Sep 2018 10:05 AM
டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூலை 19-ம் தேதி, தண்ணீர் திறக்கப்பட்டும் தற்போது வரை கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் ஒரு போக சம்பா சாகுபடியையும் தொடங்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். சாகுபடியைத் தொடங்கிய விவசாயிகளும் நீரின்றி கருகும் பயிர்களைக் கண்டு வேதனையில் உள்ளனர்.
இந்த நிலைக்குக் காரணம் என்ன என்பதை நேரில் சென்று அறிவதென காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்தது.
அதன்படி, கள ஆய்வு தொடக்க நிகழ்ச்சி கல்லணையில் நேற்று தொடங்கியது. 5 குழுக்களின் ஆய்வுப் பணியைத் தொடங்கி வைத்த காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்ததாவது:
கல்லணையில் இருந்து ஒரு குழு திருச்சி, கரூர், சேலம் வழியாக மேட்டூர் வரை செல்கிறது. மற்ற 4 குழுவினர் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, வெட்டாறு மற்றும் கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
ஆறுகளின் போக்கு, நீரை சேமிப்பதற்கு வாய்ப்புள்ள இடங்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு அறிக்கையாக தமிழக முதல்வரிடம் அளிக்கப்படும். கர்நாடகாவில் உள்ளதுபோல, தமிழகத்திலும் நீர்ப்பாசனத்துக்கு தனித் துறை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT