Published : 16 Sep 2018 01:03 PM
Last Updated : 16 Sep 2018 01:03 PM

விழுப்புரத்தில் திமுக முப்பெரும் விழா மாநாடு, விருது அளிப்பு

விழுப்புரத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.

இதில் திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவுரையாற்றி பேசியதாவது: 2003-ல் விழுப்புரம் மாவட்ட மாநாட்டில் நிறைவுரையாற்றிய கலைஞர் பேசும்போது, என் 26 வயதில் மாநாட்டுக்கு பொறுப்பேற்றேன். உனக்கு 50 வயதில் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தாமதமாக கிடைப்பதால் வலு அதிகம் என்றார்.

இந்த அதிமுக ஆட்சிக்கு முடிவுகட்ட முடிவெடுக்க வேண்டும். குட்கா ஊழல் தொடங்கி எவ்வளவு ஊழல்கள். ஊழலோடு ஊழலாக ஆட்சி நடக்கிறது.

முதல்வர், துணை முதல்வர் நெருக்கமானவர்கள் வீட்டில் ரெய்டு, டிஜிபி வீட்டில் ரெய்டு நடக்கிறது. ஆட்சியாளர்கள் மட்டும் இதில் சிக்கவில்லை.

விரைவில் சிக்குவார்கள். மத்திய, மாநில அரசு களை தேர்தல் களத்தில் அகற்று வதுதான் நம் இலக்கு. எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றி திமுகவுக்குதான். கலைஞர் இருந்து சாதிக்கவேண்டியதை கலைஞர் மகன் சாதித்தான் என்பதற்கு நீங்கள் துணை நிற்கவேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x