Published : 10 Sep 2018 05:05 PM
Last Updated : 10 Sep 2018 05:05 PM

திருவண்ணாமலை அருகே செல்போன் கடை உரிமையாளரைத் தாக்கிய திமுக இளைஞரணி நிர்வாகி உட்பட 2 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே செல்போன் கடை உரிமையாளரைத் தாக்கிய திமுக இளைஞரணி நிர்வாகி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி கிராமத்தில் வசிப்பவர் மணிவண்ணன் (25). இவர், அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடையில், கோவிந்தராஜபுரம் கிராமத்தில் வசிக்கும் கணேஷ் (26) மற்றும் பி.குயிலம் கிராமத்தில் வசிக்கும் தண்டராம்பட்டு ஒன்றிய (மேற்கு) திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ரகுபதி (29) ஆகியோர் செல்போனை பழுது நீக்கக் கொடுத்துள்ளனர்.

அதனை திரும்பப் பெற சனிக்கிழமை இரவு சென்றனர். அப்போது கடை உரிமையாளருக்கும், அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அவர்கள் மணிவண்ணனைக் கடையில் இருந்த நாற்காலியைக் கொண்டு தாக்கினர். அதில் படுகாயமடைந்தவர், தானிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து தானிப்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கணேஷ், ரகுபதி ஆகிய 2 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x