Published : 30 Sep 2018 12:40 AM
Last Updated : 30 Sep 2018 12:40 AM
தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டு ஒப்பந்தங்களில் 25 சத வீதத்தினர் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றனர். 68 நிறு வனங்கள் ரூ.62,738 கோடிக்கு முதலீடு செய்துள்ளன என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘சென்னையில் 2-வது முதலீட்டாளர்கள் மாநாட்டைநடத்துவதற்கு முன் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் போடப்பட்ட ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கான முதலீடுகள் பெறப்பட்டதா என்பதை முதல்வர் விளக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2015-ல் சென்னையில்நடந்த முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சிறு, குறு, நடுத்தர
தொழில்துறையில் ரூ.16,532 கோடியில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத் தியை தொடங்க 3 முதல் 7 ஆண்டுகள் கூட ஆகிறது. இந்த சூழலில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட 98 நிறுவனங்களில், ரூ.62,738 கோடியிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போட்ட 68 நிறுவனங்கள் பணிகளை தொடங்கி, பல்வேறு நிலைகளில் உள்ளன. இதன் மூலம், 1 லட்சத்து 10,027 நேரடி வேலை வாய்ப்புகள், பல லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆம்வே, ஐடிசி, கேப், லோட்டஸ் காலணி தொழிற்சாலை போன்ற நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளனர். அப்போலோ டயர், செயின்ட் கோபேன், டிவிஎஸ், சாம்சங் நிறுவனங்களும் விரிவாக்கம் செய்து உற்பத்தியை தொடங்கியுள்ளனர்.
முதல் மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து 2-ம் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 23, 24 தேதிகளில் நடக்கிறது. இதன் ஒருபகுதியாக, நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள், வெளிநாடுகளில், கருத்தரங்குகள், தொழில் சந்திப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இதில் அதிகமான தொழில் முனைவோர் பங்கேற்று தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
சியட் டயர் நிறுவனம் ரூ.4 ஆயிரம் கோடிக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் குஜராத்தில் இருந்து மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட உள்ளன.
பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வு புள்ளி விவரத்தில் தொழில் தொடங்க டெல்லிக்கு அடுத்ததாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் தமிழகத்தின் மீது காட்டிவரும் நம்பிக்கையாலும் 2-ம் முதலீட்டாளர் மாநாடும் முந்
தைய மாநாட்டைப்போல் பெரும் வெற்றியைப் பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT