Published : 01 Sep 2018 08:30 AM
Last Updated : 01 Sep 2018 08:30 AM
முன்னாள் முதல்வர் கருணா நிதிக்கு நடந்தது அஞ்சலிக் கூட்டம்போல இல்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
திமுக நடத்திய இரங்கல் கூட்டம் அஞ்சலி செலுத்தும் கூட்டம் மாதிரி நடக்கவில்லை. ஐக்கிய முற் போக்குக் கூட்டணியின் கூட்டமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் பேசிய பலரும் நாகரீகத்தை கடைப்பிடிக்க வில்லை.
பெட்ரோல், டீசல் விலைகளை தமிழக அரசு உட்பட எந்த மாநில அரசும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று கூறவில்லை.
மாநில அரசுக்கு வருமானம் குறையும் என்பதால் கொண்டுவர வேண்டாம் எனக் கூறி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக மாநிலத் தலைமை முடிவு செய்யும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT