Published : 17 Sep 2018 09:55 AM
Last Updated : 17 Sep 2018 09:55 AM

ஆண் நண்பர் மீது நடிகை புகார்

சின்னத்திரை நாடகங்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. இவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போரா டிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸாரை கண்டித்து வீடியோ வெளியிட்டவர். இது தொடர்பாக வடபழனி போலீஸார் நிலானியை கைது செய்திருந்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் நிலானி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தனது ஆண் நண்பர் காந்தி லலித் குமார் (33) மீது புகார் அளித்துள்ளார். தனது புகார் மனுவில், “காந்தி லலித் குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார். படப்பிடிப்பு தளத்துக்கே வந்து தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். புகாருக்குள்ளான காந்தி லலித் குமாரும், நிலானியும் கடந்த 3 ஆண்டுகளாக நட்புடன் இருப்பதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x