Published : 01 Sep 2018 08:31 AM
Last Updated : 01 Sep 2018 08:31 AM
தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்த ஆண்டு 960 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து சத்தியமங்கலத் தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், காமராஜர் பிறந்த நாளை நினைவுபடுத்தும் வகையில், மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 960 மாணவ, மாணவியருக்கு ரூ.20 ஆயிரம் வீதமும், உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் 960 மாணவ மாணவியருக்கு ரூ.10 ஆயிரம் வீதமும் இந்த ஆண்டு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அரசு நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 11 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக “டேப் மற்றும் டேட்டா” வழங்கப் படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT