Last Updated : 11 Sep, 2018 08:31 AM

 

Published : 11 Sep 2018 08:31 AM
Last Updated : 11 Sep 2018 08:31 AM

கல்லிடைக்குறிச்சி கோயில் சிலை திருட்டு வழக்கில் அறங்காவலர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு?- புலனாய்வுக்குழு விசாரணை தீவிரமடைகிறது

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோயிலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள சிலைகள் திருடப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி விற்கப்பட்டதில் முக்கிய புள்ளி கள், அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு தொடர்பு இருப்பது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வீரவ நல்லூர் அருகே அத்தாளநல்லூர் மூன்றிஸ்வரமுடையார் கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட் டது. சுமார் 1,500 ஆண்டுகள் பழமை யான இக்கோயிலில் கல்லாலான 2 துவாரபாலகர் சிலைகள் கடந்த 1995-ம் ஆண்டு திருடப்பட்டன. விசாரணையில் துவார பாலகர் கற்சிலைகள் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு, ரூ.4.98 கோடிக்கு விற்கப்பட்டது தெரியவந்தது.

இதுபோல், திருநெல்வேலி மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோயிலில் இருந்து 2005-ம் ஆண்டில் 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக 18 பேர் மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுபாஷ் சந்திர கபூர், தீனதயாளன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

9 சிலைகள் மீட்பு

இவர்களிடம் இருந்து நடராஜர், சிவகாமி அம்பாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திரதேவர், வெயிலுகந்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் ஆகிய 9 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளில் நடராஜர் சிலை மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ளது.

இந்நிலையில்தான, கல்லிடைக் குறிச்சி அறம் வளர்த்த நாயகி அம்மன் சமேத குலசேகர முடையார் கோயிலில் 1982-ம் ஆண்டு திருட்டுபோன நடராஜர் சிலையை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் ரூ.30 கோடிக்கு வாங்கியது புலன் விசாரணைக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.

குலசேகரபாண்டிய மன்னரால் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட இக்கோயிலில் ஐம்பொன்னா லான இரண்டரை அடி உயர நடராஜர் சிலை, 2 அடி உயர சிவகாமி அம்மன் சிலை, ஒன்றரை அடி உயர மாணிக்கவாசகர் சிலை, ஒரு அடி உயர பலி நாயகர் சிலை ஆகியவை கடந்த 5.7.1982 அன்று திருடுபோயின.

கல்லிடைக்குறிச்சி போலீஸா ரால் துப்புதுலக்க முடியாத நிலையில், 1984-ம் ஆண்டு இந்த வழக்கு `கண்டுபிடிக்க முடியாத வழக்கு’ என முடிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், அந்த நடராஜர் சிலை ரூ.30 கோடிக்கு விற்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதை, உயர் நீதிமன்ற புலன் விசாரணைக் குழு தற்போது கண்டுபிடித்துள்ளது.

போலி சிலை வைத்து நாடகம்

இக்கோயிலுக்கு கடந்த 6-ம் தேதி திருச்சியில் இருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் குழு வந்திருந்தது. திருடப்பட்ட 4 சிலைகள் மற்றும் இங்குள்ள 17 சிலைகளின் புகைப் படங்களை அவர்கள் சேகரித்து சென்றிருந்தனர். இவ்வாறு சேகரிக் கப்பட்ட நடராஜர் சிலையின் புகைப்படத்தையும், ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள நடரா ஜர் சிலையின் புகைப்படத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தபோதுதான், கடத்திச் செல்லப்பட்டது கல்லிடைக் குறிச்சி கோயிலில் கொள்ளை போன நடராஜர் சிலைதான் என் பதை போலீஸார் உறுதி செய்தனர்.

ஏற்கெனவே, கண்டுபிடித்ததாக அக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள சிவகாமி அம்மன் சிலையும் உண்மையான சிலை அல்ல என்ப தும் தெரியவந்துள்ளது. இது தொடர் பாகவும் போலீஸ் அதிகாரிகள் பல தரப்பினரிடமும் விசாரித்துள்ளனர்.

அறங்காவலர் குழு

சிலைகள் திருட்டு நடைபெற்ற போது இக்கோயில் நிர்வாகம் அறங்காவலர் குழுவின் கட்டுப்பாட் டில் இருந்ததாகவும், தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், சிலைகள் திருடுபோன காலத்தில் அறங்கா வலர்களாக இருந்தவர்கள், அற நிலையத்துறை அதிகாரிகள், போலீஸார் உள்ளிட்ட பலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுகின்றனர்.

இவர்களிடம் நடத்தப்படும் தீவிர விசாரணையின் முடிவில் கல்லிடைக்குறிச்சியில் மட்டுமின்றி மேலும் பல கோயில்களில் நடைபெற்ற சிலை கடத்தல் சம்பவங்களின் முழு நெட்வொர்க் மற்றும் இன்னும் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது? என்பது குறித்த மர்மங்களுக்கு விடை கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x