Published : 10 Sep 2018 08:25 AM
Last Updated : 10 Sep 2018 08:25 AM
தமிழகம் முழுவதும் வாக் காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் 67 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் நேற்று நடைபெற்றது.
நாடு முழுவதும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க் கும் வகையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் இப்பணிகளுக்காக கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் அன்றி லிருந்தே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணி கள் அக்டோபர் 31-ம் தேதி வரை 2 மாதங்கள் நடைபெற உள்ளன. இதுதவிர, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, அரசு, தனி யார் பணிகளில் இருப்போர் வசதிக்காக சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 67 ஆயிரத்து 674 வாக்குச் சாவடிகளிலும் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்கப்பட்டன.
அடுத்த சிறப்பு முகாம் செப்டம்பர் 23, அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன.அடுத்த சிறப்பு முகாம் செப்டம்பர் 23, அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT