Published : 19 Sep 2018 10:16 AM
Last Updated : 19 Sep 2018 10:16 AM

தத்கால் ரயில் டிக்கெட்டுகள் முறைகேடாக விற்பனை: வேலூரில் 2 பேர் கைது

வேலூரில் தத்கால் முறையிலான ரயில் டிக்கெட்டுகளை நூதனமான முறையில் விற்பனை செய்த 2 பேரை ரயில்வே பாதுகாப்பு போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியது: வேலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் முறை கேடாக தத்கால் முன்பதிவு ரயில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் நேற்று முன்தினம் சைதாப்பேட்டையில் உள்ள விடுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது தத்கால் முறையிலான ரயில் டிக்கெட்டுகளை போலி யான மென்பொருள் மூலம் முன் பதிவு செய்துகொடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்துவந் ததாக வடமாநிலத்தைச் சேர்ந்த ஜெய்தோவ் கோர் (50), சம்மத் மைர்டி (23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கு ரயில்வே துறையின் தத்கால் முன்பதிவு மென்பொருளை திருடிக்கொடுத்த மேலும் 2 பேரை தேடிவருகின் றனர். அவர்கள் மேற்குவங்கத்துக்கு தப்பியிருக்கலாம் என தெரிகிறது. அவர்களை ரயில்வே போலீஸ் தேடி வருகிறது.

முறைகேடு நடந்தது எப்படி?

ஐஆர்சிடிசி இணையதளம் வழி யாக தினந்தோறும் காலை 11 மணிக்கு தத்கால் முறையில் இ- டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 11 மணிக்கு வீட்டில் இருந்தபடியே தத்கால் முறையில் இ-டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள முடியும். பெரும்பாலும் தத்கால் முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடும்.

ஆனால், தத்கால் முன்பதிவுக்கான போலி மென்பொருளை பயன்படுத்தி சிலர் காலை 10.55 மணிக்கே தத்கால் இ-டிக்கெட்டை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால், காலை 11 மணிக்கு தத்கால் இ-டிக்கெட் பெற முடியாமல் மக்கள் பலர் ஏமாற்றம் அடைகின்றனர். போலி மென்பொருளை விலை கொடுத்து வாங்கும் கும்பல், இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய மோசடியில் ஈடுபடுபவர்களை போலீஸார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x