Published : 26 Sep 2018 07:57 AM
Last Updated : 26 Sep 2018 07:57 AM

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்றுமுன்தினம் கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என மீனவர்களை எச்சரித்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகளை அறுத்து கடலுக்குள் வீசினர். மீன்பிடி சாதனங்களையும் கடலில் வீசி சேதப்படுத்தினர். இதனால் அச்சமடைந்த பல மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

இதுபற்றி மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டீசல் விலை உயர்வால் மீன்பிடித் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி டீசல் போட்டுக் கொண்டு கடலுக்குச் சென்றாலும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் நீடித்து வருகிறது. இலங்கை கடற்படையினரால் ஒவ்வொரு விசைப் படகுக்கும் இருபதாயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x