Published : 11 Sep 2018 02:03 PM
Last Updated : 11 Sep 2018 02:03 PM

சைதாப்பேட்டையில் சோகம்: 10-வது மாடியிலிருந்து கீழே விழுந்த 2 தொழிலாளிகள் பலி

சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்படும் பத்து மாடி கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளிகள் 10-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தனர்.

சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கான 10 மாடி குடியிருப்புப் பணி கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக லிப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இந்தப் பணியில் கடலூரைச் சேர்ந்த பிரவீன், கோவிந்தன் உள்ளிட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.

10-வது மாடியில் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் இருவரும் திடீரெனத் தவறி விழுந்தனர். இதில் தரையில் வந்து விழுந்த இவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தா வேறு ஏதுவும் பிரச்சினையா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 மாடி உயரம் உள்ள கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடும்போது அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வலைகள் உள்ளிட்டவை அமைக்காதது ஏன் என்பது குறித்து கட்டிடப் பொறியாளர் ஜெயப்பிரகாஷ் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x