Published : 08 Sep 2018 12:32 PM
Last Updated : 08 Sep 2018 12:32 PM
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இருவர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் மாறனேரி அருகே காக்கிவாடன்பட்டியில் ராஜூ என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலத்தின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் பேன்ஸி ரக பட்டாசுகளே தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இன்று (சனிக்கிழமை) வழக்கம்போல பட்டாசு உற்பத்தி நடைபெற்றது. ஒரு அறையில் பேன்ஸி ரக பட்டாசு தயாரிப்பதற்கான மருந்துகளைச் சலித்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த அறையிலிருந்த தொழிலாளர்கள் மாரியப்பன், கிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தனர். பொன்னுச்சாமி, பாண்டி ஆகியோர் பலத்த தீக்காயமடைந்தனர்.
விபத்து குறித்து மாறனேரி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT