Published : 20 Sep 2018 08:09 AM
Last Updated : 20 Sep 2018 08:09 AM

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் கோரி ஆளுநர் அலுவலகம், தலைமைச் செயலாளருக்கு கடிதம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அனுப்பியது

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை தெரி விக்குமாறு ஆளுநர் அலுவலகத் துக்கும் தலைமைச் செயலாள ருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி தலை மையிலான விசாரணை ஆணை யம் கடிதம் அனுப்பியுள்ளது.

அப்போலோ மருத்துவமனை யில் மறைந்த முதல்வர் ஜெய லலிதா சிகிச்சை பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்யுமாறு மருத்துவ மனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதுதொடர்பாக அப்போலோ நிர்வாகம் விசாரணை ஆணையத் தில் தாக்கல் செய்த பதில் மனுவில், “மருத்துவமனையில் உள்ள சிசிடிவி சர்வரில் 45 நாட்களுக்கான காட்சிகளை மட்டுமே சேமிக்க முடியும். புதிய காட்சிகள் பதிவாகும்போது, 45 நாட்களுக்கு முந்தைய காட்சிகள் தானாக அழிந்துவிடும். அதனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதி வான காட்சிகளை தற்போது தாக் கல் செய்ய இயலாது” என தெரிவித்திருப்பதாக கூறப்படுகி றது. சிசிடிவி காட்சிகளை பெறுவதில் உறுதியாக உள்ள விசாரணை ஆணையம், வரும் 25-ம் தேதி மீண்டும் ஆஜராக அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாத னுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விவரங்கள் கோரி, ஆளுநர் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலாளருக்கு விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “முதல் வராக இருந்த ஜெயலலிதாவின் உடல்நிலை அல்லது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர் பாக எய்ம்ஸ், அப்போலோ மருத்து வமனைகள் மற்றும் ஆளுநர் அலுவலகம் இடையே ஏதேனும் தகவல் பரிமாற்றம் இருந்திருந் தால், அது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா, அது தொடர்பாக விவரங்கள் இருந்தால் விசாரணை ஆணையத் தில் தெரிவிக்கலாம்” என்று குறிப் பிட்டிருப்பதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தலைமைச் செயலாள ருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 5 பேர் கொண்ட அரசு மருத்து வர்கள் குழு, அரசிடம் சமர்ப் பித்துள்ள அறிக்கை விவரம், அறிக்கை சமர்ப்பிக்காமல் இருப் பின், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம், சுகாதாரத் துறை சார்பில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை விவரம், அப்போது இருந்த தலைமைச் செயலாளர், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் அரசுக்கோ, ஆளுநருக்கோ, மத்திய அரசுக்கோ, அப்போதைய பொறுப்பு முதல்வருக்கோ அளிக் கப்பட்ட அறிக்கை விவரம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்” என்று இடம்பெற்றுள்ள தாக ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x