Published : 16 Sep 2018 12:06 PM
Last Updated : 16 Sep 2018 12:06 PM

ரயில்களில் தொடர் கொள்ளை: தனிப்படை அமைப்பு



ஆந்திராவைச் சேர்ந்தவர் சுதீஷ். இவரது மனைவி கீதா (22). இவர் நேற்று முன் தினம் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ் பிரஸ் ரயிலில் வந்தார். அந்த ரயில் ஓங்கோல் ரயில் நிலை யத்துக்கு நேற்று அதிகாலை வந்தது. அப்போது ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த கீதாவின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை ஜன்னல் வழியாக பறிக்கும் முயற்சி யில் மர்ம ஆசாமி ஒருவர் ஈடுபட்டுள்ளார். அதைப் பறிக்க முடியாத நிலையில் கீதாவின் கைப்பையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார் அந்த கைப்பைக்குள் ரூ.25 ஆயிரம் மற்றும் செல்போன் இருந்துள்ளது.

இதே ரயிலில் ஏற்கெனவே நடந்த இன்னொரு சம்பவத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த மைதிலி (35) என்பவரிடம் இருந்து நகை பறிக்கப்பட்டுள்ளது. தொடர் கொள்ளைசே சம்பவங்களால் பயணிகள் பீதியடைந்துள்ளனர். இதையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தி கொள்ளையர் களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளதாக ரயில்வே போலீஸார் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x