Published : 18 Sep 2018 10:12 AM
Last Updated : 18 Sep 2018 10:12 AM
மறைமலை நகரில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் கூடுவாஞ்சேரியில் உள்ள 33/11 கே.வி. துணை மின் நிலையத்தில் பருவமழையை முன்னிட்டு நாளை (19-9-2018) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் நாளை காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மறைமலைநகர் தொழிற்பேட்டை, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, திருக்கச்சூர், பேரமனூர், சிங்கபெருமாள் கோயில், செங்குன்றம், மல்ரோஜாபுரம், கோவிந்தாபுரம், சட்டமங்கலம், கூடுவாஞ்சேரி டவுன், பெருமாட்டு நல்லூர், காயாரம்பேடு, நந்திவரம், மகாலஷ்மி நகர், கோவிந்தராஜபுரம், மாடம்பாக்கம், தைலாவரம், ஊரப்பாக்கம், ஆதனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மின்தடை செய்யப்படும் என்று செயற்பொறியாளர் தேசாபிமானன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT