தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ்
Updated on
1 min read

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது.

திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மிகக் கடுமையான தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும்கூட இதுவரை எதிர்பார்த்ததைவிட வெகு குறைவாகவே மழை பெய்துள்ளது.

தமிழகம் மட்டும் புதுச்சேரியில் தற்போது 38% அளவுக்கு குறைவான அளவே மழை பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் வழக்கத்தைவிட மிகக் குறைவான அளவே நீர் இருப்பு உள்ளது. 11 நீர்த்தேக்கங்கள் வறண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் தீர்க்கக் கோரி இன்று (திங்கள்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைவகிக்கிறார். தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி தமிழகம் முழுவதுமே திமுக போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்கக் கோரி மக்களவை திமுக நோட்டீஸ் அளித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in