தமிழகத்தில் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Updated on
2 min read

தமிழகத்தில் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்துள்ளது தமிழக அரசு. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் விபரம் முன்னர் வகித்த பதவி உட்பட

1.சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பதவி வகித்த மகேஷ்குமார் அகர்வால் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று செயலாக்க பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்

2.நிர்வாகப் பிரிவு ஐஜியாக பணியாற்றி வந்த வெங்கட்ராமன் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு சைபர் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. நவீன மயமாக்கல் ஐஜியாக பதவி வகித்து வந்த வினித் கூடுதல்டிஜிபியாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக டிஜிபியாக பதவி வகித்துவந்த கரன்சின்கா காவலர் பயிற்சி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

5.சேலம் சரக டிஐஜி செந்தில் குமார் ஐஜிஆக பதவி உயர்த்தப்பட்டு சேலம் நகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. சேலம் காவல் ஆணையர் சங்கர் சென்னை சிபிசிஐடி ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

7.சிபிசிஐடி ஐஜியாக பணியாற்றும் ஸ்ரீதர் நவீனமயமாக்கல் ஐஜி ஆக மாற்றப்பட்டுள்ளார்.

8.சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பணியாற்றும் பிரேம் ஆனந்த் சின்ஹா ஐஜி ஆக பதவி உயர்த்தப்பட்டு தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. வேலூர் சரக டிஐஜி ஆக பணியாற்றி வரும் வனிதா ஐஜி ஆக பதவி உயர்த்தப்பட்டு ரயில்வே ஐஜிஆக மாற்றப்பட்டுள்ளார்.

10.சென்னை போக்குவரத்து காவல் வடக்கு மண்டல இணை ஆணையராக பதவி வகித்து வரும் நஜ்முல் ஹோடா ஐஜி ஆக பதவி உயர்த்தப்பட்டு  தமிழ்நாடு காகித உற்பத்தி ஆலை விஜிலென்ஸ் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. சென்னை மத்திய குற்றப் பிரிவு இணை ஆணையராக பதவி வகித்து வரும் டி.எஸ். அன்பு ஐஜிஆக பதவி உயர்த்தப்பட்டு சென்னை நிர்வாக பிரிவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. தமிழ்நாடு போலீஸ் அகாடமி டிஐஜியாக பதவி வகித்துவரும் மஹிந்தர் குமார் ரத்தோட் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பதவியில் ஐஜியாக தொடர்கிறார்.

13. சென்னை நுண்ணறிவுப் பிரிவு ஐஜிஆக பதவி வகித்து வரும் ஈஸ்வரமூர்த்தி சென்னை மத்திய குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

14.எஸ்பிசிடி எஸ்பி ஆக பதவி வகித்துவரும் பிரவீன்குமார் அபிநாபு  டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு நெல்லை சரக டிஐஜி யாக மாற்றப்பட்டுள்ளார்.

15. நெல்லை சரக டிஐஜி ஆக பதவி வகித்துவரும் கபில் குமார் சி சரகர் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

16. சிவில் சப்ளை சிஐடி எஸ் பி ஆக பதவி வகித்து வரும் ரூபேஷ்குமார் மீனா டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு ராமநாதபுரம் சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

17.ராமநாதபுர சரக டிஐஜி காமினி வேலூர் சரக டிஐஜி யாக மாற்றப்பட்டுள்ளார்.

18.போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி ஆனி விஜயா டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு மதுரை சரக டிஐஜி ஆக மாற்றப்பட்டுள்ளார்.

19. மதுரை சரக டிஐஜி பிரதீப் குமார் சேலம் சரக டிஐஜி யாக மாற்றப்பட்டுள்ளார்.

20.மாநில மனித உரிமை ஆணைய எஸ்பி சத்யபிரியா காவலர் பயிற்சி கல்லூரி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

21.ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் திருச்சி சரக டிஐஜி யாக மாற்றப்பட்டுள்ளார்.

 22.திருச்சி சரக டிஐஜி லலிதா லட்சுமி சமூக நலன் மற்றும் மனித உரிமை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

23.சென்னை நிர்வாக டிஐஜி  எஜிலியேரசானே சென்னை போக்குவரத்து காவல் தெற்கு இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

24.சென்னை போக்குவரத்து காவல் தெற்கு இணை ஆணையர் சுதாகர் கிழக்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

25.சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் ஜெயகௌரி போக்குவரத்து காவல் வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

26.டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக பதவி வகித்து மீண்டும் தமிழகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என் கண்ணன். இவர் உளவுத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கண்ட உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in