Published : 22 Sep 2014 11:52 AM
Last Updated : 22 Sep 2014 11:52 AM

கடன்காரர்கள் துரத்தியதால் பரிதாபம்: பஸ்ஸில் இருந்து குதித்த மனைவி பலி; கணவர் படுகாயம்

கடன்காரர்கள் துரத்தியதால் ஓடும் பஸ்ஸில் இருந்து கணவன், மனைவி குதித்தனர். இதில் மனைவி பலியானார். கணவர் படுகாயமடைந்தார்.

திண்டுக்கல் அருகே குரும்பப் பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் (40). இவரது மனைவி செல்வி (35). இவர்களது ஜவுளி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. பரமசிவம் கடனை அடைக்க ரூ.4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடனை அடைக்க முடியவில்லை. கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்ததால் அவர்கள் ப்ளஸ்டூ படிக்கும் மகன் மாரிமுத்துவை அய்யம்பாளைத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, ஆந்திராவுக்குச் சென்றுவிட்டனர். நேற்று அய்யம்பாளைத்தில் உள்ள மகனைப் பார்க்க இருவரும் வந்துள்ளனர்.

தகவல் அறிந்த கடன் கொடுத்தவர்கள், அய்யம் பாளைத்துக்கு வந்து பரமசிவத் தையும், அவரது மனைவியையும் தேடினர். அதிர்ச்சியடைந்த பரமசிவம், அவரது மனைவி ஆந்திராவுக்குச் செல்ல திண்டுக்கல் அரசு பஸ்ஸில் ஏறியுள்ளனர். இவர்களை மோட்டார் சைக்கிளில் துரத்தினர். இதனால் பதற்றமடைந்த பரமசிவமும், அவரது மனைவியும் பஸ்ஸில் இருந்து குதித்தனர். இதில் செல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். பரமசிவம் பலத்த காயமடைந்தார். பஸ்ஸை நிறுத்திய பயணிகள் பரமசிவத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x