Published : 02 Jun 2019 11:18 AM
Last Updated : 02 Jun 2019 11:18 AM
ராமர் கோயில் கட்டுவதாக பாஜக பொய் பேசி வருவதாகவும் இந்த முறை அவர்கள் ராமர் கோயிலைக் கட்டாவிட்டால் வழக்கு தொடர்வோம் என்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசியுள்ளார்.
நெல்லை, பாளையங்கோட்டைப் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், பாஜக ஆட்சியில் பசுவைத் தவிர எந்த உயிர்களை வதைத்தாலும் குற்றமில்லை என்ற நிலை உள்ளதாகக் குற்றம்சாட்டினார். தமிழர்களை பாரம்பரிய வழிபாட்டிலிருந்து வெளியேற்று அண்ணா, ஜெயலலிதா, கருணாநிதி சமாதிக்குக் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள் என சீமான் விமர்சனம் வைத்தார்.
உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றும் நம்மைக் கண்டு அச்சப்படுபவர்களை வெற்றி மூலம் விரும்ப வையுங்கள் என்றும் அவர் பேசினார்.
“தேர்தலும் நமது நோக்கமும் இன்னமும் முடியவில்லை. இந்த 5 ஆண்டுகளில் நீங்கள் ராமர் கோயில் கட்டணும். இல்லையென்றால் நாம் தமிழர் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும். இவர்கள் பல ஆண்டுகளாக ராமர் கோயில் கட்டுவோம் என்று நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
திமுக தனியா, நாங்க தனியா ஒண்டிக்கு ஒண்டி மோதிப்பாத்துருவோம். மோதத் திறன் இருக்கிறதா?” என்று பேசினார் சீமான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT