Published : 20 Jun 2019 07:21 AM
Last Updated : 20 Jun 2019 07:21 AM

கடும் தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை அரசு மருத்துவமனைகளில் 50 ஆயிரம் நோயாளிகள் பாதிப்பு

சென்னை அரசு மருத்துவமனைகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் அரசு பொது மருத் துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவ மனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனை, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தாய்சேய் நல மருத்துவமனை என 15-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சுமார் 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். புறநோயாளிகளாக 40 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களைத் தவிர நோயாளிகளுடன் உறவினர்கள், நண் பர்கள் என ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளுக்கு வந்து செல்கின்றனர்.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தினசரி குடிநீர் தேவை 1 கோடி லிட்டராக உள்ளது. இதில், 60 லட்சம் லிட்டர் தண்ணீரை மட்டும் குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது. மீதமுள்ள 40 லட்சம் லிட்டர் தண்ணீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட இதர தேவைக்கான தண் ணீரை மருத்துவமனைகளின் நிர்வா கம் நிலத்தடி நீரைக் கொண்டு சமாளிக் கிறது. தற்போது சென்னையில் ஏற்பட் டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால் குடிநீர் வாரியம் வழக்கமாக அரசு மருத்துவ மனைகளுக்கு வழங்கும் தண்ணீரை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் வரண்டு விட்டதால் அரசு மருத்துவமனைகளில் கடுமை யான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது.

தண்ணீரை மிச்சப்படுத்துவதற் காக அரசு மருத்துவமனைகளில் ஒரு சில கழிப்பறைகளை மட்டும் திறந்து வைத்துவிட்டு, மீதமுள்ள கழிப்பறைகளுக்கு பூட்டு போடப்பட் டுள்ளது. திறந்து வைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளிலும் தண்ணீர் குறை வாகவே வருவதால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத் துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரை சேமிக்கும் டேங்குகள் காலியாக உள்ளன. குடிநீர் குழாய் களில் தண்ணீர் வராததால், நோயாளி கள் வெளியில் சென்று பணம் கொடுத்து குடிநீர் வாங்கி வருகின் றனர். இதனால், மருத்துவமனை களின் வெளியே தண்ணீர் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் அதி கரித்துள்ளன. மருத்துவமனைகளில் உள்ள அம்மா உணவகத்திலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் சாப்பிட வருபவர்கள் தண்ணீரை கொண்டு வரும்படி ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக நோயாளிகளிடம் கேட்டபோது, “மருத்துவமனையில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. வெளியே உள்ள கடையில் தண்ணீர் கேட்டால் 2 மடங்கு விலை சொல்கின் றனர். அதனால், குடிப்பதற்காக வீட் டில் இருந்தே தண்ணீரை எடுத்து வருகிறோம். வெளியூர்களில் இருந்து வந்துள்ளவர்கள், அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து குடிநீர் வாங்கிச் செல்கின்றனர். பரிசோதனைக்கு சிறுநீர் எடுத்து வரச் சொல்கின்றனர். ஒரு சில கழிப்பறைகள் மட்டுமே திறந்துள்ளது. அங்கும் தண்ணீர் குறைவாக வருவதால் கூட்டம் அதிகமாக உள்ளது. அந்த கழிப்பறையில் வரும் தண்ணீரை கொண்டு கைகளைக்கூட சரியாக கழுவ முடியவில்லை. அப்படியே சிறுநீரை எடுத்து வந்து பரிசோதனைக்கு தரவேண்டியுள்ளது. ஆனால், டாக்டர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளில் மட்டும் தண்ணீர் நன்றாக வருகிறது” என்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “அனைத்து இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. முடிந்தவரை கிடைக்கும் நீரை கொண்டு அரசு மருத்துவமனைகளில் சமாளிக்கப்படு கிறது. குடிநீர் வாரியத்திடம் கூடுதல் தண்ணீர் வழங்கும்படி கேட்டிருக்கி றோம். அரசு மருத்துவமனைகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x