Published : 10 Jun 2019 04:25 PM
Last Updated : 10 Jun 2019 04:25 PM

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; புயலாக மாறுகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்றதை அடுத்து அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

''லட்சத்தீவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் கிழக்கு, மத்திய அரபிக்கடல் பகுதியில்  குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து புயலாகவும் மாறக்கூடும்.

இதன் காரணமாக மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு அரபிக்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை பகுதியில் அதிகபட்சமாக 7 செ.மீ . மழை பதிவாகியுள்ளது''.

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x