Published : 22 Jun 2019 09:15 PM
Last Updated : 22 Jun 2019 09:15 PM

நடிகர் சங்க தேர்தல்; ஐசரி கணேஷ்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதிபதியை தனியாக அணுகியதால் நடவடிக்கை

நடிகர் சங்க வழக்கை விசாரணைக்கு எடுக்காமல் இருக்க நீதிபதியை தனியாக அணுகியதால் சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த ஐசரி கணேஷ்மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டுள்ளது.

நடிகர் சங்க தேர்தல் பலவித சிக்கல்களை கடந்து குறிப்பிட்ட ஜூன்.23 அன்றே நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நடிகர் சங்கம் தேர்தல் நடக்கும் இடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணை நடந்தது. மயிலாப்பூர் ஆர்.கே சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

நடிகர் சங்கத்தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் விஷால், கார்த்திக் அடங்கிய பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில் ஐசரி கணேஷ் உள்ளிட்ட சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன.

தேர்தல் நடத்தும் விதம் பாதுகாப்பு குறித்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் சங்கரதாஸ் அணியை சேர்ந்த ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் மீது கோர்ட் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இது குறித்து வழக்கை விசாரித்துவரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவிக்கையில், சிலர் மூலமாக ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டாம் என்று தன்னை அணுகியதாக கூறி இந்த கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x