Published : 08 Jun 2019 04:56 PM
Last Updated : 08 Jun 2019 04:56 PM
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவாவடுதுறை ஆதீனத்தில் மூத்த தம்பிரானாக கடந்த 45 வருடங்களாக சிவத்தொண்டு புரிந்து வருபவர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள்.
இவர், நேற்று (வெள்ளிக்கிழமை) மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார்.
மதுரை ஆதீன மரபுகளின்படி, மதுரை ஆதீனம் 292-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆச்சார்ய அபிசேகம், மந்திரக் கசாயம், நிர்வாண தீட்சை, ஆறுகட்டி சுந்தரவேடம் போன்ற அனைத்து சம்பிரதாய சடங்குகளையும் செய்து, ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் மதுரை ஆதீனத்தின் இளவரசராக நியமனம் செய்தார்.
மதுரை ஆதீன இளவரசருக்கு, "ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்" என்ற திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. இவ்விழாவில் மதுரை ஆதீனத் திருமடத்தின் நிர்வாகிகளும், திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT