Published : 07 Sep 2014 12:45 PM
Last Updated : 07 Sep 2014 12:45 PM
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள கணிதவியல் நிறுவனத்துக்கு, இன்போசிஸ் பவுண்டேஷன் ரூ.30 கோடி நிதி அளித்திருக்கிறது.
இந்த நிதி, சென்னை கணிதவியல் நிறுவன ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், ஆசிரியர் களின் ஊதியத்தை உயர்த்தவும் பயன்படுத்தப்படும்.
இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான, இன்போசிஸ் பவுண்டேஷன் அளித்திருக்கும் இந்த நிதி, பணி அனுபவம் கிடைத்த பிறகு, பட்டமேற்படிப்புக்கு செல்லும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிக்கவும் உதவும் என்று பவுண்டேஷன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT