Published : 08 Jun 2019 04:06 PM
Last Updated : 08 Jun 2019 04:06 PM
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் உறவினரிடம் 60 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது.
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (37). இவர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் உறவினர்.
வசந்தகுமார் தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்துடன் ஒரு வாடகை காரில் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டிக்குச் சென்றுள்ளார். அங்கு அக்கா வீட்டில் தங்கிவிட்டு, பின்னர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
அதன்பின், வசந்தகுமாரின் குடும்பத்தினர் நகைகளை கழட்டி ஒரு பையில் வைத்து காரில் வைத்துள்ளனர். கார் ஓட்டுநர் சரவண பிரவு முதலில் சாப்பிட்டு வந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து சரவணபிரபு உள்ளிட்டோர் சாப்பிட்டு வந்ததும் அனைவரும் காரில் புறப்பட்டு திருத்தங்கல் வந்துள்ளனர். வீட்டுக்கு வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 60 பவுன் நகைகளைக் காணவில்லை.
இதுகுறித்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் வசந்தகுமார் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT