Published : 01 Sep 2014 10:00 AM
Last Updated : 01 Sep 2014 10:00 AM

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி 3 நாள் சுற்றுப்பயணம்

திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி 3 நாள் சுற்றப்பயணம் செய்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது திருவாரூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை அவர் திறந்துவைக்கிறார். இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திமுக தலைவர் கருணாநிதி வரும் 24-ம் தேதி திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு செல்கிறார். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு காட்டூரில் கலையரங்கம் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். 25-ம் தேதி காலை 10 மணிக்குகொரடாச்சேரியில் பொது விநி யோகக் கட்டிடம் மற்றும் பயணியர் நிழற்குடையை திறந்து வைக்கிறார்.

பூண்டி நினைவு அறக்கட்டளை சார்பில் கொரடாச்சேரியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் அரசு இறுதித் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு தங்கக்காசு வழங்குகிறார். அன்றிரவு 7 மணிக்கு திருவாரூரில் மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

26-ம் தேதி காலை 10 மணிக்கு கூத்தாநல்லூரில் பொதுவிநியோகக் கட்டிடம் மற்றும் பயணியர் நிழற்குடையை கருணாநிதி திறந்துவைக்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x