Published : 18 Sep 2014 11:57 AM
Last Updated : 18 Sep 2014 11:57 AM

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப் பிக்க கால வரம்பு நீட்டிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறுபான்மையி னர் நல ஆணையர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவி களுக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதுவரை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த சிறுபான் மையின மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம், www.momascholarship.gov.in என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பித்து, தங்கள் கல்வி நிலையங்களுக்கு அனுப்பலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x