Published : 06 Jun 2019 09:34 AM
Last Updated : 06 Jun 2019 09:34 AM
ஓபிஎஸ்ஸின் பண மழைதான் மகனை ஜெயிக்க வைத்ததாக அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆன்மிக சித்தரான அவரது மகன் ஜெயபிரதீப் தான் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள்.
வெற்றி பெறுவது சிரமம் என்று செய்திகள் வந்த நிலையில் சென்னையிலிருந்து ஒரு குழுவை தேனிக்கு வரவைத்து தனிப்பட்ட முறையில் சர்வே எடுக்க வைத்தாராம் பிரதீப்.
சர்வே டீம் தந்த ரிப்போர்ட் படி எங்கெங்கே என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை எல்லாம் கண்டுபிடித்து அத்தனையையும் சரி செய்திருக்கிறார்.
அத்துடன் வாக்குப் பதிவுக்கு சில தினங்களுக்கு முன்னதாகக் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களை எல்லாம் அழைத்துக் கூட்டம் போட்ட பிரதீப், 45 நிமிடம் உருக்கமாகப் பேசினாராம்.
பேசி முடித்தபோது அவரோடு சேர்ந்து அங்கிருந்த அத்தனை பேரும் கண்கலங்கிப் போனார்களாம்.
இந்த டச் தான் ரவீந்திரநாத்தை தோல்வியிலிருந்து காப்பாற்றி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT