Published : 10 Jun 2019 08:48 AM
Last Updated : 10 Jun 2019 08:48 AM
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
மக்களின் போக்குவரத்து வசதிக்கு மட்டுமல்லாமல், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வரு கிறது சென்னை மெட்ரோ ரயில் நிலையம். சோலார் மூலம் மின் உற்பத்தி, பசுமை காடுகள் வரிசையில் மின்சாரம் இல்லாமல் இயற்கை வழியில் இயங்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத் தையொட்டி, சென்னை புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக் கப்பட்டு தற்போது ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தினமும் 10 கிலோ லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக் கும் திறன் வாய்ந்தது இந்த சுத்திகரிப்பு நிலையம். இதன்மூலம் சிறிய அளவிலான தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 10 கிலோ லிட்டர் திறன்வாய்ந்த மற் றொரு சுத்திகரிப்பு நிலையம் தற் போது அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையக வளாகத்தில் உள்ள 75 கிலோ லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது 150 கிலோ லிட்டர் திறனுக்கு தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் குறைந்த செலவில் அதிகம் பலனளிக்கும் வகையில் உள்ளது. இதன்படி, இயற்கை வழி யில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங் கள் அமைப்பதில் மெட்ரோ ரயில் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சென்னை புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT