Published : 22 Jun 2019 07:52 AM
Last Updated : 22 Jun 2019 07:52 AM

பெண் மருத்துவரிடம் ரூ.7 கோடி மோசடி செய்தவர் கைது

திருவண்ணாமலையை சேர்ந்த சக்கரவர்த்தி (35), திருமண தகவல் மையம் மூலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை பெண் மருத்துவருடன் அறிமுக மாகியுள்ளார். அவர் தன்னை மருத்துவர் என்று அறிமுகப் படுத்திக்கொண்டார். திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.6 கோடியே 90 லட்சத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி யுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதில் திருவண்ணாமலையை சேர்ந்த சக்கரவர்த்தி, சமூக வலைதளங்கள் மூலமாக மருத்துவம், பொறியியல் படித்த, திருமணம் ஆகாத மற்றும் விதவை பெண்களை குறி வைத்து, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பணம் மற்றும் நகைகளை பெற்று தலைமறைவாகி வருவது தெரியவந்துள்ளது.

இவரால் ஏமாற்றப்பட்ட மதுரையை சேர்ந்த பெண்கள், கடந்த 2014-ம் ஆண்டு அளித்த புகாரின் பேரில் மதுரை அண்ணா நகர் போலீஸார் சக்கரவர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்த னர். இதேபோன்று திருச்சியில் பெண் ஒருவரிடம் இருந்து ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இவர் சென்னை, மதுரை, திருச்சி, கும்பகோணம், திருவண்ணாமலை ஆகிய பகுதி களைச் சேர்ந்த 9 பெண்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து ரூ.9 கோடி பணத்தை மோசடி செய்துள்ளார். இந்நிலையில் பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சக்கரவர்த்தியை கைது செய்த சென்னை போலீஸார், அவரை 4 நாட்கள் காவலில் விசாரணை நடத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x