Published : 13 Jun 2019 04:49 PM
Last Updated : 13 Jun 2019 04:49 PM

கோடை வெயிலைத் தாங்க முடியாமல் 3 மாதங்களாக ஏசிக்குள் வாழ்ந்த பாம்பு

கோடை வெயில் தாங்காமல் 3 மாதங்களாக ஏசிக்குள் வாழ்ந்து வந்த பாம்பை புதுச்சேரி வீடொன்றில் இருந்து வனத்துறையினர் மீட்டனர்.

 

புதுச்சேரி, தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்தவர்  ஏழுமலை. ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அவரது வீட்டின் படுக்கை அறையில் ஏசி பொருத்தப்பட்டிருந்தது. அதில் வழக்கத்துக்கு மாறாக கடும் இரைச்சல் கேட்டது. இதனால் பழுதுபார்க்கும் மெக்கானிக்கை ஏழுமலை அழைத்துள்ளார்.

 

மெக்கானிக் வந்து பார்த்தபோது ஏசிக்குள் இரண்டு பாம்புத் தோல்கள் இருந்தன. ஏசியை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்ததில், அதில் பாம்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஏழுமலை உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

 

சுமார் 1 மணி நேர முயற்சிக்குப் பிறகு, வனத்துறையினர் பாம்பை மீட்டனர். ஏசியையும் அதன் வெளிப்பகுதியையும் இணைக்க சுவற்றில் போடப்பட்டிருந்த துளை வழியாக பாம்பு வந்துள்ளது. சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக பாம்பு ஏசிக்குள் வாழ்ந்து வந்துள்ளது. இத்தகவலை வனத்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x