Published : 15 Jun 2019 04:15 PM
Last Updated : 15 Jun 2019 04:15 PM

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை: கனிமொழி 

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவே இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை" என்றார்.

சென்னை சேத்துப்பட்டில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகாயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். அதன்பின்னர் அனைத்து ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் ஸ்வாதி சம்பவம் போலவே நடந்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை என கனிமொழி எம்.பி. கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு குறித்து அரசு சிந்திக்கவே இல்லை. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாலேயே கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தற்போதைய அதிமுக அரசு பராமரிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது" என்று குற்றஞ்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x