Last Updated : 27 Jun, 2019 05:10 PM

 

Published : 27 Jun 2019 05:10 PM
Last Updated : 27 Jun 2019 05:10 PM

சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 12 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய 12 பேரின் ஜாமீன் மனுவை மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ல் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், ஜோதிமணி உட்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் ஜோதிமணி இறந்துவிட்டார்.

இந்த வழக்கு, அண்மையில் நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மதுரை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் முதன் முறையாக இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது யுவராஜ் உட்பட 14 பேரை போலீஸார் ஆஜர்படுத்தினர்.

வழக்கை நீதிபதி தனசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. யுவராஜ், பிரபு தவிர்த்து குமார் என்ற சிவக்குமார், சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சந்திரசேகரன் உட்பட 12 பேரும்  ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

விசாரணைக்குப்பின் தற்போதைய சூழ்நிலையில் 12 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x