Published : 12 Jun 2019 05:56 PM
Last Updated : 12 Jun 2019 05:56 PM

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அனல் காற்று எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

''வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்குப் பருவமழை காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், புதுச்சேரி ஆகிய 10 நகரங்களில் அனல் காற்று எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில், கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவலாவில் 10 செ.மீ. மழையும், ஜி பஜாரில் 7 செ.மீ . மழையும், கோவை மாவட்டம் வால்பாறையில் 6 செ.மீ . மழையும், சின்னக்கல்லார், குளச்சலில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x