Published : 22 Jun 2019 02:21 PM
Last Updated : 22 Jun 2019 02:21 PM
வெப்பச்சலனத்தால் சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல்:
தென்மேற்குப் பருவமழையால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நெல்லை மாவட்டங்களில் 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வெப்ப நிலை படிப்படியாக குறைந்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையிலும் 2 நாட்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 7 செ.மீ. மழையும், தேவாலாவில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT