Published : 04 Jun 2019 08:29 PM
Last Updated : 04 Jun 2019 08:29 PM

தெரு நாயை பழிவாங்க விஷம் கலந்த சிக்கன்பகோடா வைத்த கொடூரன்: 6 குட்டிகளுடன் பூனையும் பலி: பொதுமக்கள் கண்ணீர்  

சென்னை, திருவொற்றியூர் பகுதியில், தினமும் குரைத்து தனக்கு தொல்லை கொடுக்கும் நாயை பழிவாங்க, விஷம் கலந்த சிக்கன் பக்கோடா வைத்ததில், 6 குட்டிகளுடன், தாய் பூனையும் பலியான சோகம் தாங்க முடியாமல், பொது மக்கள் கண்ணீர் வடித்து, அஞ்சலி செலுத்தினர்.

 சென்னை, திருவொற்றியூர், முனுசாமி தெருவில் வசிப்பவர் விஜயகுமார்(45), இவர், கார்பெண்டர் தொழில் செய்து வருகிறார், இவர் வசிக்கும் பகுதியில், தெரு நாய் ஒன்று உள்ளது. அந்த நாய், விஜயகுமார் போகும் , வரும் போதெல்லாம் குரைத்து தொல்லை கொடுத்துள்ளது.

இதனால், விஜயகுமார் , அந்த நாய் மீது ஆத்திரத்தில் இருந்தார், அதை பழி வாங்க தீர்மானித்துள்ளார்.  இதைத்தொடர்ந்து, நேற்று முன் தினம் இரவு, விஜயகுமார், கடை ஒன்றில், சிக்கன் பக்கோடா வாங்கினார், அதை வீட்டிற்கு கொண்டு வந்த அவர், அந்த பக்கோடாவில், கடும் விஷமான மயில் துத்தம் எனும் விஷத்தை கலந்தார்.

பின்னர், தினமும் தொல்லை கொடுத்த நாயை , அன்போடு அழைத்தார், அந்த நாயும் , விஜயகுமார் அருகில் வாலாட்டி நின்றது,  அதற்கு, விஷம் கலந்த சிக்கன் பக்கோடாவை வைத்தார், தான் சாப்பிடப்போவது , விஷம் என தெரியாமால், அந்த நாய், சிக்கன் பக்கோடாவை சுவைக்க  ஆரம்பித்ததும், அங்கிருந்து விஜயகுமார் நழுவி விட்டார்.

மறு நாள் காலையில், அந்த நாய் உயிருக்கு போராடியபடி கிடந்தது. அதன் அருகில்தான் ஒரு பூனை, 6 குட்டிகளை ஈன்றிருந்தது, அந்த பூனையும், அதன் குட்டிகளும், அந்த விஷம் தோய்ந்த சிக்கன் பக்கோடோவை சாப்பிட்டுள்ளது. அதை சாப்பிட்டதால் தாய்ப்பூனையும் 6 குட்டிகளும் உயிருக்கு போராடியபடி கிடந்தது.

ஆனால், அவர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் உயிருக்குப் ;போராடிய அவைகள்  ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்தது. இதைப்பார்த்த இளகிய மனதுள்ள சிலர்  சோகம் தாளாமல், கண்ணீர் சிந்தினர்.

மனிதனுக்கு செய்யும் ஈம சடங்கு போல், இறந்த அந்த பிராணிகளுக்கும், மாலை அணிவித்து, இறுதி அஞ்சலி செலுத்தினர், இது தொடர்பாக, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

புகாரை அடுத்து விஜயகுமாரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். நாயை பழிவாங்க வைத்த விஷம், 6 குட்டிகளுடன், தாய் பூனையும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x