Published : 07 Jun 2019 05:08 PM
Last Updated : 07 Jun 2019 05:08 PM

செல்லூர் ராஜூ ஒரு பணக்கார அமைச்சர்: ஜெயக்குமார் கிண்டல்

கூட்டுறவுத்துறை பணக்காரத் துறை என்றும் செல்லூர் ராஜூ ஒரு பணக்கார அமைச்சர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை, தண்டையார்பேட்டையில் கூட்டுறவுத் துறை சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். 

அப்போது விழாவில் பேசிய அவர், ''சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. கண்டெய்னர் போக்குவரத்தைச் சீரமைக்க 500 கோடி ரூபாய் செலவில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இடத்தைப் பொறுத்தவரை 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை ஒரு பெரிய பணக்காரத் துறை. அமைச்சர்களைப் பொறுத்தவரையில் பணக்கார அமைச்சர் இங்கே இருக்கிறார். அவர் நம், செல்லூர் ராஜூ. அவர் இப்போது ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும். வட சென்னை மக்கள், ஏழை எளிய, நடுத்தர மக்கள். இங்கு பெட்ரோ பங்க் அமைக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி நிலம் போக, 4 ஏக்கர் நிலம் மீதம் உள்ளது.

அந்த 4 ஏக்கர் நிலத்தில், ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு திருமண மண்டபம் கட்டுவதற்கு அவர் அறிவிப்பு செய்ய வேண்டும்'' என்றார் ஜெயக்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x