Published : 10 Jun 2019 12:00 AM
Last Updated : 10 Jun 2019 12:00 AM

சேலத்தில் ஆய்வுக் கூட்டம் குடிநீர் பிரச்சினைக்கு துரித நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் கே.பழனிசாமி 4 நாள் பயணமாக, கடந்த 6-ம் தேதி சேலம் வந்தார். அரசு விழாக்களில் பங்கேற்ற முதல்வர், நேற்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்தும், வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மக்களுக்கு எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது, குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழிமுறைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தேவைப்படும் உதவிகள் உள்ளிட்டவற்றை முதல்வர் கேட்டறிந்தார்.

அப்போது பேசிய முதல்வர், மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதமாக எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x