Published : 11 Jun 2019 08:55 AM
Last Updated : 11 Jun 2019 08:55 AM

‘இந்து தமிழ்’ சுட்டிக் காட்டிய திட்டங்களை நிச்சயம் நிறைவேற்றுவேன்: திருநாவுக்கரசர்

மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாததால் திருச்சி மாவட்டத்தில் முடங்கிக் கிடக்கும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், இங்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி திருநாவுக்கரசர் இத்திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பாரா என கேள்வி எழுப்பியும், 'இந்து தமிழ்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.

இந்நிலையில், நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சு.திருநாவுக்கரசர், “திருச்சி மக்களவைத் தொகுதியில் சுமார் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு மிக்க நன்றி. இந்த மாவட்டத்தில் முடங்கிக் கிடக்கும் திட்டங்கள் குறித்து இந்து தமிழ் நாளிதழில் வெளியான செய்தியைப் படித்தேன். அந்த திட்டங்களுடன், எதுவெல்லாம் மக்களுக்கான தேவைகளோ, அவற்றையெல்லாம் நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x