Published : 07 Jun 2019 04:17 PM
Last Updated : 07 Jun 2019 04:17 PM
தென்மேற்குப் பருவ மழை கேரளாவில் தொடங்க உள்ளது. இதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது:
''தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தென்கிழக்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது. மேலும் தென் இந்தியாவின் தெற்குப் பகுதியில் வளிமண்டலத்தில் கீழ் அடுக்கில் கிழக்கு மேற்காக காற்றின் திசைமாறும் பகுதி நிலவுகிறது
மேற்குக் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உள்ள நிலையில் நாளை தென்மேற்குப் பருவமழை கேரளாவில் பெய்யக்கூடும்
24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. கன்னியாகுமரியில் சிவலோகம், சூழலக்கூடு ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது
அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும்”.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT