Last Updated : 13 Jun, 2019 11:57 AM

 

Published : 13 Jun 2019 11:57 AM
Last Updated : 13 Jun 2019 11:57 AM

பெரியகுளத்தில் நிபா வைரஸ் தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டு துவக்கம் 

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நிபா வைஸ் தாக்குதலுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 

இடுக்கி உள்ளிட்ட கேரளா பகுதிகளில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழக எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் தேனி மாவட்டத்தில் இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன. லோயர்கேம்ப், கம்பம்மெட்டு, போடிமெட்டு பகுதியில் கேரளாவில் இருந்து வாகனங்கள் மருத்துவக்குழு மூலம் சோதனை செய்து அனுப்பப்பட்டு வருகின்றன.

க.விலக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதற்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் நிபா வைரஸ் காய்ச்சலுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு தயார் நிலையில் உள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிலைய மருத்துவர்கள் கூறுகையில், "வவ்வால் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது. இப்பழங்களை சாப்பிட்ட ஆடு, மாடு இறைச்சிகளை சாப்பிடுபவர்களுக்கும் நிபா வைரஸ் தொற்ற வாய்ப்புள்ளது. நிபா வைரஸ் காய்ச்சல் ஏற்படுத்தும் வவ்வால்கள் கேரள மாநிலத்தில் மட்டுமே உள்ளது. இங்கு மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகள் தயார் நிலையில் உள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x