Published : 12 Jun 2019 09:04 AM
Last Updated : 12 Jun 2019 09:04 AM
சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கபெரு மாள்கோயில் ரயில் நிலைய யார்டில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ள தால், இன்று (12-ம் தேதி) முதல் வரும் 14-ம் தேதி வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கடற் கரையில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் சுற்றுவட்ட ரயில் (409000) இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை முற்றிலுமாக ரத்து செய்யப் படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 8.56 மணி (40523), 9.38 மணி (40525), 10.14 மணி (40527), 11.02 மணி (40529) மற்றும் செங்கல் பட்டில் இருந்து சென்னை கடற் கரைக்கு காலை 11.50 மணி (40534), மதியம் 12.15 (40536), மதி யம் 1 மணிக்கு (40538) இயக்கப் படும் மின்சார ரயில்கள் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.
எனவே, மேற்கண்ட ரயில் கள் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை மட் டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வௌியிட்டுள்ள செய் திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT