Published : 12 Jun 2019 05:27 PM
Last Updated : 12 Jun 2019 05:27 PM
சென்னை அரும்பாக்கத்தில் பிரதமர் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில், அதிகபட்சமாக 70% வரை தள்ளுபடியில் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை, அரும்பாக்கத்தில் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஒளஷதி கேந்த்ரா திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
''மக்கள் மருந்தகத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 70% வரை மருந்துகளின் விலை குறைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும். பிராண்டட் மருந்துகள் என்றில்லாமல் ஜெனரிக் மருந்துகள் இங்கே விற்கப்படுகின்றன.
பொதுவாக புரோட்டீன் டப்பா வெளியில் 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் இங்கு அதன் விலை ரூ.200 மட்டுமே. அந்த அளவுக்கு விலை குறைக்கப்பட்டு விற்கப்படுகிறது.
வெறும் மருந்துகள் மட்டுமல்ல, சத்துப் பொருட்களும் சத்து மாத்திரைகளும்கூட இங்கு கிடைக்கும். இதன்மூலம் ஏழைகள் மிகுந்த அளவில் பயன்பெறுவர்''.
இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT